சென்னை: இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:- அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான பி.எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு ஜூன் 20 அன்று தொடங்கியது. இதற்கான கடைசி தேதி நேற்று ஆகும்.
இது தொடர்பாக, மாணவர்களின் நலன் கருதி, பி.எட் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, பி.எட் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூலை 31-ம் தேதி வெளியிடப்படும். கல்லூரி தேர்வு செயல்முறை ஆகஸ்ட் 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும். கல்லூரி ஒதுக்கீட்டு உத்தரவு ஆகஸ்ட் 13-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்.
மாணவர்கள் தங்கள் கல்லூரி ஒதுக்கீட்டு உத்தரவை www.iwiase.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேரலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கும் என்று அவர் கூறினார்.