சென்னை: அரசு சட்டக் கல்லூரிகளில் இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் (முன் சட்டம்) ஆகிய பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு எண்.01 2025 தேதி 24.01.2025 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் (முன் சட்டம்) ஆகிய பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசித் தேதி 03.03.2025 முதல் 18.03.2025 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.