புது டெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கும் ரயில்வே அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது:- ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் பல்வேறு சேவைகளை வழங்க உரிமம் பெற்ற நிறுவனங்களின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் ரயில்வே நிர்வாகம் அல்லது ஐ.ஆர்.சி.டி.சி.யால் தரப்படுத்தப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.
அடையாள அட்டையில் பணியாளரின் பெயர், ஆதார் எண், மருத்துவ தகுதிச் சான்றிதழ் மற்றும் அதன் செல்லுபடியாகும் தேதி, காவல் சரிபார்ப்பு தேதி மற்றும் உரிமம் பெற்ற நிறுவனத்தின் பெயர் ஆகியவை இருக்க வேண்டும்.

இது அந்தந்த நிலையத்தின் நிலைய கண்காணிப்பாளர் அல்லது நிலைய மேலாளர் அல்லது ஐ.ஆர்.சி.டி.சி.யின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் கையொப்பத்தைக் கொண்டிருக்கும்.
எந்தவொரு விற்பனையாளரும் அடையாள அட்டையைக் காட்டாமல் விற்பனை செய்ய அனுமதிக்கப்படக்கூடாது. இது உடனடியாக செயல்படுத்தப்படும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.