அரியலூர்: ராமதாஸ் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டால், தமிழகத்தில் அன்புமணிக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா. அருள்மொழி தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பு.தா. அருள்மொழி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வன்னியர் சங்கமும் பாமகவும் தயக்கமின்றி மக்களுக்காக உழைக்கத் தயாராகிவிட்டன. கட்சியையும் சங்கத்தையும் உருவாக்கியவர் ராமதாஸ். அவர் கட்சியின் தலைவர். அவர் உருவாக்கிய இந்த அமைப்பில் எந்த சலசலப்பும் இல்லை. அன்புமணி கட்சியின் தலைவர் இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார். பிறகு ஏன் அன்புமணி நான் தலைவர் என்று கூறுகிறார்?

ராமதாஸ் சொல்வதைக் கேட்டால், அன்புமணிக்கு முக்கியத்துவம் கிடைக்கும். ராமதாஸ் தன்னை தமிழக முதல்வராக்குவதாக கூறுகிறார். நாம் கைகோர்த்து ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொண்டால் அன்புமணிக்கு முதல்வர் பதவி கிடைக்கும். இவ்வாறு பு.தா. அருள்மொழி கூறினார்.