சென்னை: கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருது 2023 முதல் பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் (UGC) வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான அறிவிப்பை UGC சமீபத்தில் வெளியிட்டது. அதன் விவரங்கள் பின்வருமாறு:-
உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ITI பயிற்றுனர்கள் மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் 2025-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 9-ம் தேதிக்குள் www.awards.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தலில் தாங்கள் செய்த சிறந்த முயற்சிகள் மற்றும் ஆராய்ச்சிகளை விவரிக்கும் அறிக்கையை தொகுக்க வேண்டும்.

கல்லூரி முதல்வர்கள், இயக்குநர்கள், துணைவேந்தர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியாது. மேலும், விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் முழுநேர ஆசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். கல்வியாளர்கள் உட்பட 5 பேர் கொண்ட குழு விருதுக்கு தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது, சான்றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
இது செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் ஜனாதிபதியால் கௌரவிக்கப்படும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், தெளிவுபடுத்த 01129 581120 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை /www.ugc.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.