By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி..!!
    1 Min Read
    ரபேல் விமானம் தொடர்பாக சீனாவின் தவறான பிரசாரம்: பிரான்ஸ் கடும் கண்டனம்
    1 Min Read
    பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் வரி: டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    ஸ்பெயின்: லஞ்ச விவகாரம் பின்னணியில், பாலியல் தொழிலாளர்களிடம் செல்ல கட்சி உறுப்பினர்களுக்கு தடை
    1 Min Read
    அதிகாரத்தை பகிர தொடங்கிய ஷி ஜின்பிங் – சீன அரசியல் மாற்றத்தின் ஆரம்பமா?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஒற்றுமை மலரவும் உதவும் மனித நேயம்
    1 Min Read
    விரைவில் உலகப் போர் வெடிக்கும்.. நிதின் கட்கரி ஓபன் டாக்..!!
    2 Min Read
    இந்தியாவில் முடக்கப்பட்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் X தளம்..!!
    1 Min Read
    மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான கட்டுப்பாடுகளில் தளர்வு..!!
    3 Min Read
    சாட் ஜிபிடி கண்டறியப்படாத மர்ம நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்துள்ளது..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மக்கள் நலவாழ்வுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு
    1 Min Read
    இரு வேளையும் உடற்பயிற்சி செய்பவர்களாக நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
    1 Min Read
    போலீசார் அதிரடி…. இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பீடி இலைகள் பறிமுதல்
    1 Min Read
    இயந்திர கோளாறு கண்டுபிடிப்பு… புறப்பட்ட விமானம் நிறுத்தம்
    1 Min Read
    மணிமாறன் கொலை வழக்கில் சரணடைந்த 3 பேரிடம் விசாரணை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஜெயலலிதா பொருட்களை ஏலம் விடுவது குறித்து விரைவில் ஆலோசனை..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > ஜெயலலிதா பொருட்களை ஏலம் விடுவது குறித்து விரைவில் ஆலோசனை..!!
தமிழகம்

ஜெயலலிதா பொருட்களை ஏலம் விடுவது குறித்து விரைவில் ஆலோசனை..!!

Periyasamy
Last updated: February 21, 2025 12:18 pm
By Periyasamy 3 Min Read
Share
SHARE

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட 27 கிலோ தங்க நகைகள் மற்றும் பொருட்களை ஏலம் விடுவது தொடர்பாக அரசு விரைவில் உயர்மட்ட ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-96 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா வீட்டில் தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகைகள், சேலைகள், காலணிகள், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கு தமிழகத்தில் இருந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் கர்நாடக அரசு கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து நீதிபதி குன்ஹா கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம் விடவும், வழக்கை நடத்திய கர்நாடக அரசுக்கு உரிய தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை 2017-ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அப்போது ஜெயலலிதா மறைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரம் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை.

வழக்கு முடிந்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும், வழக்கு நடத்தி கர்நாடக அரசுக்கு செலுத்திய தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவின் நகைகளை 2023-ல் ஏலம் விட வேண்டும் என பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஜெயலலிதாவிடம் இருந்து கர்நாடக அரசு கருவூலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடி வழங்க வேண்டும். அதைத்தொடர்ந்து கர்நாடக கருவூலத்தில் இருந்து நகை, சொத்து ஆவணங்கள் அடங்கிய 6 பெட்டிகள் தமிழக அரசிடம் கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, 1,562 ஏக்கர் நில ஆவணங்கள், 11,344 சேலைகள், 750 காலணிகள், 91 கைக்கடிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டன. மேலும், சொத்து பட்டியலில் இருந்த 27 கிலோ எடையுள்ள 468 தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் குறித்து உயர்மட்ட அதிகாரிகள் விரைவில் ஆலோசிப்பார்கள் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது:-

முன்னாள் முதல்வர் ஒருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்தை எளிதில் ஏலம் விட முடியாது. ஏலம் தொடர்பான நடைமுறைகளையும் கர்நாடக நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டிருக்கலாம். என்பதை பரிசீலித்து, உயர்மட்ட ஆலோசனை நடத்தி, பின்னர் அமைச்சரவையில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டு, அரசு உத்தரவு பிறப்பித்து, வருவாய்த்துறை மூலம் மட்டுமே ஏலம் விட முடியும். எனவே, அதிகாரிகளின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்கள்.

இதற்கிடையே, 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையில் ஆளும் அரசு ஈடுபட்டால், அது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும், திமுக அரசு மீது அதிமுகவினர் குற்றச்சாட்டுகளை கூறி அனுதாபம் தேடலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

You Might Also Like

மக்கள் நலவாழ்வுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

இரு வேளையும் உடற்பயிற்சி செய்பவர்களாக நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!

போலீசார் அதிரடி…. இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பீடி இலைகள் பறிமுதல்

இயந்திர கோளாறு கண்டுபிடிப்பு… புறப்பட்ட விமானம் நிறுத்தம்

மணிமாறன் கொலை வழக்கில் சரணடைந்த 3 பேரிடம் விசாரணை

TAGGED:auctioningConsultationJayalalithaaஆலோசனைபொருட்கள்ஜெயலலிதா
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

மக்கள் நலவாழ்வுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?