திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் அம்மன் பல்லக்கில் ஏறி கோயிலை வலம் வருவார். தினமும் இரவு 8 மணிக்கு பூதம், சிம்மம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரக்குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

14-ந்தேதி வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் வலம் வரும் நிகழ்ச்சியும், வையாளி கந்துருளும் காட்சியளிக்கும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. காலை 10.30 மணி முதல் 11.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் 15-ம் தேதி உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 3-ம் தேதியை வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.