சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளின் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தென்னிந்திய கடலோரப் பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரி கடல் ஆகியவை மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 60 கிமீ வேகத்திலும் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும், மத்திய வங்காள விரிகுடாவில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும், ஆந்திரப் பிரதேச கடற்கரை மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 60 கிமீ வேகத்திலும் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.