சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ., தூரத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை மெட்ரோ ரயில் சேவை இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும். 2028-க்குள் முழுப் பணிகளையும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 3 வழித்தடங்களில் மொத்தம் 138 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் இருந்து ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் கொண்டு வரப்பட்டு பூந்தமல்லி பணிமனையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓட்டுநர் இல்லாத 2-வது மெட்ரோ ரயில், ஓரிரு நாட்களில் சென்னை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் கூறியதாவது:-
கோயம்பேடு பூந்தமல்லி பணிமனை மற்றும் பணிமனை ஆகிய இடங்களில், ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயில், குறுகிய தூரத்திற்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக ரயிலை அதிவேகமாக இயக்கி சோதனை நடத்த வேண்டும். இதனிடையே, ஓட்டுநர் இல்லாத இரண்டாவது மெட்ரோ ரயில், ஓரிரு நாட்களில் சென்னைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி முதல் பூந்தமல்லி பைபாஸ் – கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரையிலான வழித்தடத்தில் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.