சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணை இந்த ஆண்டு 6-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 31,854 கன அடியிலிருந்து 36,985 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. நீர் இருப்பு 92.645 டிஎம்சி. மேட்டூர் அணையிலிருந்து மொத்தம் 23,300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. டெல்டா பாசனத்திற்காக 22,500 கன அடி தண்ணீரும், மேற்கு-கிழக்கு கால்வாய் வழியாக 800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

இந்த ஆண்டு மேட்டூர் அணை 6-வது முறையாக 120 அடியை எட்டியுள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
குளித்தல், துணி துவைத்தல், செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.