சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை கனமழையால் நீர் வரத்து அதிகரித்ததால் இன்று முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் இன்று முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இந்த ஆண்டு மட்டும், 120 அடியாக உள்ள மேட்டூர் அணையின் முழு கொள்ளளவை 7-வது முறையாக எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.