தூத்துக்குடி: திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று சுவாமிஜியை சந்தித்த பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி ஆலையின் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 4-ம் தேதி இந்த கார் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மினி உலக முதலீட்டாளர்கள் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு புதிய தொழில்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் புதிய திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு பயனளித்துள்ளன. இருப்பினும், பிரதமர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணம் மற்றும் கல்வி நிதியை வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பரந்த மனப்பான்மை உண்டு.
பிரதமர் மோடி அறிவித்ததை விட பல மடங்கு பெரிய திட்ட அறிவிப்புகள் துாத்துக்குடியில் காத்திருக்கின்றன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வரலாறு படைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.