சென்னை: நாகையில் 600 பேர் பணியாற்றும் வகையில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார். மேலும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்புகள்; கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் பூங்காவும், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மேலும் புதிய சிப்காட் பூங்காவும், தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காவும், திருவாரூர், ராமநாதபுரத்தில் ஜவுளி பூங்காவும் அமைக்கப்படும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும்” என்றார்.