கடலூர்: நெய்வேலி என்எல்சி II அனல் மின் நிலையத்தின் மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியதாகக் கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்எல்சி II அனல் மின் நிலையத்தில் இன்று அதிகாலை மின்மாற்றியில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானதாகக் கூறப்படுகிறது. நெய்வேலி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மின்மாற்றியில் இருந்து பல மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.