சென்னை: நம் வயதின் முதிர்வு காரணமாக கழுத்துப் பகுதியில் இருக்கும் தோல்களில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. கழுத்துப் பகுதியில் உள்ள தோல் சுருக்கங்களை போக்க கீழ்கண்ட முறைகளை கையாளலாம்.
உங்கள் முகத்தை கழுவும்போது, உங்கள் கழுத்தையும் சேர்த்து சுத்தப்படுத்துதல் அவசியம். முகத்தை எந்த அளவிற்கு கவனிப்பீர்களோ அதேபோல் கழுத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அழுக்கு மற்றும் தூசு போன்றவை படியாமல் இருக்க செய்யும்.
சோப்பு பயன்படுத்துவதைக் காட்டிலும் மூலிகை சோப்பு மற்றும் மூலிகை க்லேன்சரை பயன்படுத்தலாம். இது உங்கள் முகத்திற்கு பொலிவை தருவது மட்டுமில்லாமல் ph சமநிலையை மாற்ற செய்கின்றது.
வீட்டை விட்டு நாம் வெளியே செல்கையில் முகத்திற்கு சன்- ஸ்கிரீன் பயன்படுத்தலாம். அது உங்கள்முகத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க செய்யும். வாரத்திற்கு ஒருமுறையாவது உங்கள் முகத்தை எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும். காரணம் அப்பொழுதான் உங்கள் சருமம் பொலிவுடனும், பளபளப்புடனும் இருக்க செய்யும்.
அதிக அளவு நாம் தண்ணீர் குடிக்க வேண்டும். காரணம் நம் சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதால் அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் மட்டுமே முகத்தில் சுருக்கங்களும், கோடுகளும் வராமல் இருக்க செய்யும். வைட்டமின்- சி உடைய கீரிம்களை நீங்கள் பயன்படுத்தலாம். இல்லையென்றால் சீரம் உபயோக்கிக்கலாம்.
இந்த முறைகளை நீங்கள் சரியாக கடைபிடித்தால் உங்கள் கழுத்துப் பகுதியில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகள் மறைந்து விடும்.