வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் ஆகிய கடலோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை அழிந்து வரும் ஆலிவர் ரெட்லை ஆமைகள் முட்டையிட கடற்கரைக்கு வருகின்றன. வனத்துறையினர் இந்த ஆமை முட்டைகளை சேகரித்து, ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து, 55 முதல் 60 நாட்களுக்கு பிறகு கடலில் விடுகின்றனர்.
தற்போது ஜனவரியில் வழக்கமாக முட்டையிட வரும் ஆமைகள் ஒரு வாரத்துக்கு முன்பே புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, மணியன்தீவு பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. இக்கடற்கரை பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் 3 கிலோமீட்டர் தூரம் வரை கடல் முழுவதும் சேறு நிறைந்து காணப்படுவதால், முட்டையிட வரும் ஆலிவர் ரெட்லி ஆமைகள் சேற்றில் சிக்கி சில சமயங்களில் இறந்தும் இறந்து விடுகின்றன.

இந்நிலையில் நேற்று மாலை வேதாரண்யம் கடற்கரையில் மூன்று ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. கோடியக்கரை வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல், வனக்காப்பாளர் இளஞ்செழியன் மற்றும் வனத்துறையினர் இறந்த ஆமைகளை எடுத்து வந்து புதைத்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆலிவர் ரெட்லி ஆமைகள் ஆயிரக்கணக்கான கி.மீ., தூரம் சென்று வேதாரண்யம் கோடியக்கரை கடல் பகுதியில் முட்டையிடும். அப்படி வரும் ஆமைகள் மீன்பிடிக்கும்போது மீனவர்களின் வலையில் சிக்கினால் அவற்றை பாதுகாப்பாக வெளியே எடுத்து மீண்டும் கடலில் விட வேண்டும்.