ஊட்டி: சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடப்பட்டு அதில் பூக்கள் பூத்துள்ளன. மேலும், பல ஆயிரம் தொட்டிகளில் பூக்கள் நடப்பட்டு, அவை அனைத்தும் கண்ணாடி மாளிகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர். இது தவிர, பூங்காவில் பல லட்சம் பேரணி செடிகள் வைக்கப்பட்டுள்ள பேரணி இல்லம் (கண்ணாடி வீடு) உள்ளது.
மேலும், அப்பர் கார்டன் பகுதியில் ஆயிரக்கணக்கான கற்றாழைகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை அமைந்துள்ளது. இவை இரண்டும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகைகள். பூங்காவில் கற்றாழை வளர்க்கப்படும் பேரணி வீடு மற்றும் கண்ணாடி மாளிகை ஆகிய இரண்டும் சேதமடைந்தன. இந்த வீடுகளின் மேற்கூரையில் கண்ணாடிகள் அவ்வப்போது விழுந்து கொண்டே இருந்தன. சுற்றுலா பயணிகள் கண்ணாடி வீடுகளுக்குள் நுழையும் போது மேற்கூரையில் உள்ள கண்ணாடி விழுந்து விபத்துகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அங்கிருந்த கண்ணாடி வீடுகளும் மூடப்பட்டன.

இந்நிலையில், இந்த கண்ணாடி மாளிகைகளை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த கண்ணாடி வீடுகளை அசல் தன்மையை மாற்றாமல் சீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் இந்த கண்ணாடி வீடுகளை சீரமைக்கும் பணியை தோட்டக்கலைத்துறையினர் தொடங்கினர். முதற்கட்டமாக ஊட்டி அப்பர் கார்டன் பகுதியில் கற்றாழை செடிகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி மாளிகையை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கற்றாழை மற்றும் பேரணி செடிகளை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது, பூங்கா நுழைவு வாயிலில் உள்ள பேரணி மாளிகை மற்றும் கண்ணாடி மாளிகையை சீரமைக்கும் பணி துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது. கோடை காலம் நெருங்கி வருவதால், கண்ணாடி மாளிகையை புதுப்பிக்கும் பணியை பூங்கா நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. கண்ணாடி மாளிகையின் மேற்கூரையில் இருந்த கண்ணாடிகள் அனைத்தும் அகற்றப்பட்டு, புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதேபோல், ஓரங்களில் இருந்த கண்ணாடிகள் அனைத்தும் அகற்றப்பட்டு, புதிய பிரேம்கள் பொருத்தப்பட்டு, அவற்றில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. கோடை காலத்தில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகையை பார்க்கும் வகையில் வரும் கோடை சீசனுக்குள் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.