மதுரை: மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி இன்று மதியம் திறந்து வைக்கிறார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை ஆதீனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ரயில்வே பாலத்திற்கு பின், தற்போது பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலம் பெருமைக்குரியது. இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவித்திருந்தேன். அவை அனைத்தையும் அவர் நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவித்து அவர்களின் படகுகளையும் மீட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதற்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டுக்குரியவர். காங்கிரஸ் ஆட்சியில் கச்சத்தீவு இணைக்கப்பட்டது. அப்போது அதை ஆதரித்தவர்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை.
ஆனால் இப்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பேசுகிறார்கள். பிரதமர் கச்சத்தீவை மீட்டெடுப்பார் என்றும், இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு இருப்பதை உறுதி செய்வார் என்றும் நான் நம்புகிறேன். இவ்வாறு மதுரை ஆதீனம் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.