மதுரை: மதுரை-ராமேஸ்வரம் வழித்தடத்தில் நேற்று இயக்கப்பட்ட அரசு பேருந்தின் முன்பக்க டயர் திருபுவனம் அருகே வெடித்து சாலையில் கழன்றோடியது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். இருப்பினும் பஸ் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் அனைவரும் காயமின்றி தப்பினர்.
மதுரை-ராமேஸ்வரம் வழித்தடத்தில் நேற்று இயக்கப்பட்ட அரசு பேருந்தின் முன்பக்க டயர் திருபுவனம் அருகே வெடித்து சாலையில் கழன்று ஓடியது. இதை பார்த்து பயணிகள் அலறினர்.
சக்கரத்தின் ரிம் பகுதி 100 மீட்டர் தொலைவுக்கு சாலையில் உரசியபடி சென்ற நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக இயக்கி பேருந்தை நிறுத்தியதால் 55 பயணிகளும் காயங்களின்றி தப்பினர்.
பேருந்தின் டயரில் கிரிப்பே இல்லாமல் தேய்ந்துபோய் இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.