சென்னை: 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வடசென்னை ரவுடியை ஆந்திராவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். ரவுடி 2001-ல் இருந்து தலைமறைவானார்; போலீசாரால் எங்கும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ரவுடி சேரா மீது ஆயுதத் தடைச் சட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ரவுடி சேரா மீது கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், ஆர்.கே.நகரில் குற்ற வழக்குகள் உள்ளன. நகர், கடற்கரை காவல் நிலையங்கள், மாதவரம் மற்றும் செம்பியம் காவல் நிலையங்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பதுங்கியிருந்த ரவுடி சேராவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதான ரவுடி சேராவை தனிப்படை போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்த சேரா என்கிற ரவுடி ராஜேந்திரன் ஏ+ பிரிவு ரவுடி. கூட்டாளிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ரவுடி சேரா கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவில் தங்கி செல்வந்தர்களிடம் பணம் பறிக்கும் குற்றங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சேராவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.