சேலம்: சேலத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அளித்த பேட்டி:- தமிழக அரசு தாயுமானவர் திட்டத்தைத் தொடங்கியுள்ளது, இது விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றி. அவர் தனது முதல் தேர்தல் அறிக்கையில் வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
அப்போது, இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று மற்ற அரசியல் கட்சிகள் கூறியிருந்தன. ஆனால், தற்போது இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. இதை செயல்படுத்தியதற்காக அரசுக்கும், முதல்வருக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 20 ஆண்டுகளாக, தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறோம். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நியாயமாக இல்லை.
தேர்தலின் போது பல்வேறு மீறல்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.