தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. “அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்” என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அரசு தொடக்கப் பள்ளிகளில் நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான பணியை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்வர் தொடங்கி வைத்தார். தற்போது, சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் இந்த திட்டத்தின் இறுதிப்பணி நிறைவு பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்தார்.
மாடல் பள்ளிகளின் சாதனைகளால் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பிடிக்கும் வகையில் மாற்றங்கள் ஏற்படும் என முதல்வர் குறிப்பிட்டார். “தமிழ்நாட்டின் நவீனமயமான அரசு தொடக்கப் பள்ளிகள் நமது அடையாளமாக மாறுகின்றன,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள், கல்வி தரத்தை உயர்த்துவதோடு, அரசு பள்ளிகளின் தரத்தை முன்னேற்றும் அடித்தளமாக அமைந்துள்ளன.