சென்னை: தெற்கு ரயில்வே இந்த கோரிக்கைகளை ரயில்வே வாரியத்திற்கு அனுப்பியது. இதை பரிசீலித்த பிறகு, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மொத்தம் 33 ரயில்களுக்கு 42 கூடுதல் நிறுத்தங்களுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இவற்றில், தமிழ்நாட்டில் 21 ரயில்களுக்கு 38 கூடுதல் நிறுத்தங்கள் செய்யப்பட்டுள்ளன, விவரங்கள்: சென்னை சென்ட்ரல் – ஷிமோகா டவுன், கர்நாடகா – சென்னை ரயில் (12691-12692) ஆம்பூரில் 2 நிமிடங்கள் நிற்கும். இது ஆகஸ்ட் 22 முதல் அமலுக்கு வரும். தன்பாத் – ஆலப்புழா ரயில் (13351) ஆகஸ்ட் 18 முதல் குடியாத்தம் மற்றும் வாணியம்பாடியில் தலா 2 நிமிடங்கள் நின்று செல்லும்.

அரக்கோணம் – சேலம் மெமு ரயில் (16080) வாலத்தூர் நிலையத்திலும் மேல்பட்டியிலும் நின்று செல்லும். சேலம் – அரக்கோணம் மெமு ரயில் (16087) மேல்பட்டியில் நின்று செல்லும். இந்த நிறுத்தம் ஆகஸ்ட் 18 முதல் அமலுக்கு வரும்.
திருச்சி – பாலக்காடு விரைவு ரயில் (16843-16844) ஆகஸ்ட் 18 முதல் இருகூர் நிலையத்தில் நின்று செல்லும். இந்த தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.