சோளிங்கர்: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரோப் கார் சேவை 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் 1,305 படிகள் கொண்ட மலையில் அமைந்துள்ளது.
பக்தர்களின் வசதிக்காக இந்தக் கோயிலில் ஒரு ரோப் கார் சேவை இயங்கி வருகிறது. ரோப் கார் மூலம் மலைக்குச் செல்ல ரூ. 50 கட்டணமும், மீண்டும் மலையிலிருந்து கீழே வர ரூ. 50 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ரோப் கார் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, ரோப் கார் பராமரிப்பு பணிக்காக ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படும்.
பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, வரும் 27-ம் தேதி முதல் ரோப் கார் சேவை வழக்கம் போல் இயங்கும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ரோப் கார் நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ளது.