சென்னை: நீதிமன்றத்தைப் பற்றி அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024 நவம்பரில், சீமான் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்காததால், வழக்கறிஞர் சார்லஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், புகாரின் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பிஎன்எஸ் பிரிவு 196 உட்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.