ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள், பெரணி செடிகள், கள்ளி செடிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
மேலும், பூங்காவில் நடப்பட்டுள்ள லட்சக்கணக்கான மலர்ச்செடிகளில் பூத்து குலுங்கும் மலர்களை ரசிப்பது வழக்கம். ஆனால், தற்போது மலர் கண்காட்சிக்காக பூங்காவை தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பூங்கா முழுவதும் பூக்கள் இல்லாமல் காட்சியளிக்கிறது. கண்ணாடி வீட்டில் மட்டுமே பூக்கள் தெரியும்.

எனவே, பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடையாமல் இருக்க, பூங்கா நிர்வாகம் செல்பி ஸ்பாட்கள், பூந்தொட்டிகளுடன் கூடிய பிரமிடுகள் போன்ற அலங்காரங்களை அந்த இடங்களில் அமைத்துள்ளது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த செல்பி ஸ்பாட் அருகே நின்று பூக்கள் இல்லாத போது புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். குறிப்பாக, இத்தாலிய கார்டன் அருகே உள்ள ‘செல்பி ஸ்பாட்’ மேரி கோல்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் அருகே சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.