சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகை ஆகியவை அடுத்த மாதம் நடைபெற உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அதன்படி, சூப்பர் அதிவிரைவு வார இறுதி சிறப்பு ரயில் (06123) செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
எதிர் திசையில், சிறப்பு ரயில் (06124) போத்தனூரில் இருந்து செப்டம்பர் 26, அக்டோபர் 3, 10, 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். வாராந்திர சிறப்பு ரயில் (06121) செங்கோட்டையில் இருந்து செப்டம்பர் 24, அக்டோபர் 1, 8, 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

எதிர் திசையில், சிறப்பு ரயில் (06122) செங்கோட்டையில் இருந்து செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16 மற்றும் அக்டோபர் 23 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். விளம்பரம் சிறப்பு ரயில் (06012) செப்டம்பர் 28, அக்டோபர் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
எதிர் திசையில், சிறப்பு ரயில் (06011) செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவிலை அடையும். சிறப்பு ரயில் (06070) செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரவு 9.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும். எதிர் திசையில், சிறப்பு ரயில் (06069) செப்டம்பர் 26, அக்டோபர் 3, 10, 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 12.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.
இது தவிர, சென்னை எழும்பூர் – தூத்துக்குடி இடையேயும், சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.