சென்னை: ஸ்ரீபெரும்புதூர் ஜீயர்வுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜனுக்கு, வரும் 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-
திருச்சி ஸ்ரீரங்கம் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், தனது கருத்துகளை வெளிப்படுத்தும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் கடந்த வாரம் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஸ்ரீபெரும்புதூர் ஜீய சுவாமிகளை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தன்னைப் பற்றி பொய்யான மற்றும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் போலியான உரையாடலை சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சென்னை சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்தினம் ரங்கராஜனை ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். பின்னர், அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை வரும் 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வீட்டில் சைபர் கிரைம் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.