முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகனின் செயல்பாடுகளால் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனிம வளத் துறையில் தொடரும் புகார்களால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மே 8ஆம் தேதி அமைச்சரவை இலாகா மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
துரைமுருகனிடம் இருந்த கனிம வளத் துறை, ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. துரைமுருகனுக்கு ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை வழங்கப்பட்டது.திடீரென நடந்த இந்த மாற்றம், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் சீனியர் தலைவரான துரைமுருகனின் இலாகா மாற்றம், கட்சியினருக்கும் நேரடியாக ஒரு மெசேஜாகும்.கடந்த மாதம் சட்டசபையில் கனிம வள பிரச்சனை குறித்து விவாதம் நடந்தது.

அதில் துரைமுருகனின் பதில்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.மண், மணல், ஜல்லி விலைகள் குறித்து மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த துறையில் முறைகேடுகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதில் துரைமுருகன் பங்களிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.அமலாக்கத் துறை ரெய்டுகளும் நடைபெற்று வருகிறது.
இதனால் மாநில அரசுக்கு ஆபத்து ஏற்படலாம் என ஸ்டாலின் கவலையில் உள்ளார்.இதையடுத்து, முக்கியமான துறையை மாற்றி வைத்துள்ள அவர், கட்சிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.துரைமுருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என தகவல்