நீலகிரி: “நீலகிரி மாவட்டத்தில் மார்ச் மாதத்துக்குள் 85-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளை மூட திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவது அதிர்ச்சியளிக்கும் செய்தி” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: “நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு அரசு பள்ளியையும் மூடும் திட்டமோ, உத்தரவோ இல்லை” என்றார்.