சென்னை: மே தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மே 1-ம் தேதி மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மே தினத்தையொட்டி, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள், உரிமம் பெற்ற கிளப்களுடன் இணைந்த பார்கள், ஓட்டல்கள் மற்றும் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள், மதுக்கடைகள் மே 1-ம் தேதி மூடப்படாது. மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.