தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் இயல்பை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:- ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் இயல்பை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி மற்றும் 84 டிகிரி பாரன்ஹீட் இருக்கும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை பதிவின்படி, அதிகபட்சமாக வேலூர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மதுரை மாவட்டம் மேலுார், கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை, கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டியில் 3 செ.மீ., மழை பதிவானது. மதுரை மாவட்டம், தானியமங்கலத்தில் மதுரை மாவட்டத்தில் 2 செ.மீ. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.