சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 100-102 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 84.2-86 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்று வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.