சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக, சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பியுள்ளதாக, அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வருவதற்கு முன்னர், அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படக்கூடாது என திண்டுக்கல்லை சேர்ந்த சூர்ய மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து, 4 வாரங்களில் விண்ணப்பத்தை பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து அதிமுக, பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை விசாரித்தது.
நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் கட்சியில் பிளவுகள் உள்ளதா என்பதை திருப்தியாக அறிந்த பிறகே விசாரணை தொடர வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதிமுக, சூர்ய மூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் பிறப்பித்த உத்தரவை, மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்து சேர்க்க கோரியது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் சி. குமரப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்தபோது, தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பியுள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி, மறு ஆய்வு மனு செல்லத்தக்கதல்ல என கூறி, மனுவை முடித்து வைத்தார்.