சென்னை : பல மாவட்டங்களில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதில் 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்தது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என்றும், இயல்பை விட சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் இம்மாத இறுதி வரையில் வெப்பம் அதிகரித்தே இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 100 டிகிரியை தாண்டி வெயில் பல மாவட்டங்களில் பதிவானது.