தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வேருடன் மரம் சாய்ந்து சமையலறை கட்டடத்தின் மீது விழுந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மிதமான மழை பெய்து வரும் நிலையில், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்த பழமையான பெரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்து சமையலறை கட்டடத்தின் மீது விழுந்தது.
மரம் விழுந்தபோது சமையலறையிலும், சுற்றுப்புறத்திலும் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.