By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைனில் ரஷ்யா நடத்திய மிகப்பெரிய டிரோன் தாக்குதல்
    1 Min Read
    தென்னாப்பிரிக்காவில் 16ம் ஆண்டு மே 18ம் தினம் நினைவேந்தல் நிகழ்வு
    0 Min Read
    அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் விருப்பம்..!!
    2 Min Read
    ஆப்கானிஸ்தானில் இருந்து உலர் பழங்களை ஏற்றிச் வந்த லாரிகளுக்கு அனுமதி வழங்கிய இந்தியா..!!
    1 Min Read
    பலூசிஸ்தானின் தற்போதைய நிலை: மீர் யார் பலூசின் குரல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்திய ரயில்வே அறிமுகப்படுத்திய புதிய Auto Upgrade வசதி
    2 Min Read
    விண்ணில் ஏவப்பட்டது PSLV C61 ராக்கெட்: EOS-09 செயற்கைக்கோள் புதிய உயரம்
    2 Min Read
    இந்திய ரிசர்வ் வங்கி புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட இருக்கிறது
    1 Min Read
    தெலுங்கானாவில் 20 நக்சல்கள் கைது: போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஆயுதங்கள் பறிமுதல்
    1 Min Read
    பாலக்காட்டில் வி.டி. பட்டதிரிப்பாடு நினைவு கலாசார மையம் திறப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!!
    1 Min Read
    கோடை மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்: மின்சார அமைச்சர் தகவல்
    2 Min Read
    பெரியார் பல்கலைக்கழகப் உதவிப் பேராசிரியர் வைத்தியநாதனின் பணிநீக்கத்தை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்..!!
    2 Min Read
    திண்டுக்கல்-சபரிமலை ரயில் திட்டம் மீண்டும் தொடக்கம்..!!
    2 Min Read
    இன்று மே 18 … உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு தவெக நினைவேந்தல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அரசுப்பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுப்பதா? மா.கம்யூ., கடும் கண்டனம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > அரசுப்பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுப்பதா? மா.கம்யூ., கடும் கண்டனம்
தமிழகம்

அரசுப்பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுப்பதா? மா.கம்யூ., கடும் கண்டனம்

Nagaraj
Last updated: January 3, 2025 7:43 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: அரசுப்பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுப்பதா?… தமிழகத்தில் 500 அரசுப்பள்ளிகள் தனியாருக்கு தத்துக்கொடுக்கும் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் அரங்கில் தற்போது அரசுபள்ளிகள் தத்து கொடுப்பது குறித்த புகைச்சல் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதன் நோக்கம் படிப்படியாக அரசுப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும். அரசுப்பள்ளிகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய, விளிம்புநிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தில் ஏறக்குறைய 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் அரசுப்பள்ளிகளில் 24310 தொடக்கப்பள்ளிகள், 7024 நடுநிலைப்பள்ளிகள், 3135 உயர்நிலைப்பள்ளிகள், 3110 மேல்நிலைப்பள்ளிகள் என 37579 பள்ளிகள் இயங்குகின்றன. அரசு உதவி பெறும்பள்ளிகள் 8328 செயல்படுகின்றன. இதில் 46 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் குறைந்த அளவு இயங்கும் 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் ஏறக்குறைய 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

அரசுப்பள்ளிகளின் மூன்றில் ஒரு பங்கு கூட செயல்படாத தனியார் பள்ளிகள் தான் அதிக அளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விட தனியார் பள்ளிகளில் அதிக அளவு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

2500 பள்ளிகளில் கழிப்பறை வசதிகள்கூட இல்லையென்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆரம்பப்பள்ளிகளின் இடைநிற்றல் 16 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்தி கல்வித் தரத்தை மேம்படுத்தப்படுவதற்கு பதிலாக அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்துக்கொடுக்க முனைவது தமிழக ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயலாகும்.

பல தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளே கிடையாது. கல்வி கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர அரசு பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழ்நாடு அரசு தப்பிப்பது, நிதி சுமையை காரணம் காட்டி தனியாருக்கு தத்துக்கொடுப்பது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும்.

அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துகொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசே அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You Might Also Like

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!!

கோடை மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்: மின்சார அமைச்சர் தகவல்

பெரியார் பல்கலைக்கழகப் உதவிப் பேராசிரியர் வைத்தியநாதனின் பணிநீக்கத்தை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்..!!

திண்டுக்கல்-சபரிமலை ரயில் திட்டம் மீண்டும் தொடக்கம்..!!

இன்று மே 18 … உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு தவெக நினைவேந்தல்

TAGGED:adoptiongovernment schoolsM.ComPrivatestrong condemnationஅரசு பள்ளிகள்கடும் கண்டனம்தத்து கொடுப்பதுதனியார்மா.கம்யூ
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
உலகம்

உக்ரைனில் ரஷ்யா நடத்திய மிகப்பெரிய டிரோன் தாக்குதல்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?