தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில்2021 மே மாதத்தில் முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலின், கொரோனா அச்சத்துக்கு இடையே மக்களை பாதுகாப்பதில் முதன்மை காட்டினார். அவரது தலைமையில் திராவிட மாடல் அரசு பல துறைகளில் முன்னேற்றங்களை பதிவு செய்துள்ளது. தொழில் வளர்ச்சிக்காக 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ரூ.10.27 லட்சம் கோடி முதலீடுகளும், 32.23 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 9.69% பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது. ஏற்றுமதியில் இருமடங்கு உயர்வு பெற்ற தமிழ்நாடு, மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. தொழிலாளர் எண்ணிக்கை 2.9 கோடியிலிருந்து 3.87 கோடியாக உயர்ந்துள்ளது.மருத்துவம், கல்வி, பெண்கள் நலன், பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘நான் முதல்வன்’, ‘கலைஞர் கனவு இல்லம்’ உள்ளிட்ட திட்டங்கள் சமூக முன்னேற்றத்தை தூண்டியுள்ளன.2023–24 உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 51.3% ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்கள் இல்லாததோடு, பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் இந்திய அளவில் மிகக் குறைவாக உள்ளது.
சென்னை, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாகத் தெரிவாகியுள்ளது.புத்தாக்கம், தோல் தயாரிப்பு, ஜவுளி ஏற்றுமதி, தொழிலாளர்கள் எண்ணிக்கை, மருத்துவர்கள் பணியிடம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இதில் முக்கியமாக பெண்கள் தொழிலாளர்களின் பங்கு அதிகம்.இந்தியாவில் செயல்படும் திறன் மையங்களில் சென்னை 24.5% வளர்ச்சியுடன் முன்னிலை வகிக்கிறது. மொத்தமாக, தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுவந்துவிட்டது.இது, திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மற்றும் நவீன நிர்வாகத்தின் வெற்றி எனக் கூறப்படுகிறது.