மதுரை: மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம் ரயில் நிலையம் செல்லும் வழியில் பாம்பன் கடலின் நடுவே புதிய தொங்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்தது. பின்னர், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாலத்தை ஆய்வு செய்து, பல்வேறு நிபந்தனைகளுடன் பாலத்தில் ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்தார்.
தொடர்ந்து, பாலத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, பயணிகள் போக்குவரத்துக்கான சான்றிதழ் பெறப்பட்டது. புதிய பாம்பன் பாலம் கட்டும் பணி குறித்து, ஆர்.வி.என்.எல்., நிறுவன ஆலோசகர் அன்பழகன் கூறியதாவது:- நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த புதிய பாலம், தொடர் பராமரிப்பு காரணமாக, 100 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும்.

பாலத்தின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள லிப்ட் தொழில்நுட்பம் நாட்டிலேயே முதன்முறையாக பாம்பனில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாம்பன் பாலம் 75 கி.மீ வேகத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் நடுவில் மட்டும் 50 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்படும். பழைய பாம்பன் பாலத்தில், 10 கி.மீ., வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.