சென்னை: மதுரையில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு 76 பயணிகளுடன் வந்தடைந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் கண்ணாடி நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விரிசல் ஏற்பட்டது.
இதைக் கவனித்த விமானி உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, விமானி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 74 பயணிகள் மற்றும் 5 விமானக் குழுவினர் உட்பட மொத்தம் 79 பேர் காயமின்றி தப்பினர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாதுர்யமாகச் செயல்பட்ட விமானி பாதுகாப்பாக தரையிறங்கியதால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.