டெல்லி: தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 13-ம் தேதிக்குள் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக அந்தமான் பகுதியில் தொடங்கும் பருவமழை 2 வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 10 நாட்கள் முன்னதாகவே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 5% அதிகமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்துள்ளது. வெயிலின் தாக்கம் குறையும் – பிரதீப் ஜான் பருவமழை முன்கூட்டியே தொடங்குவதால் வெயிலின் தாக்கம் குறையும் என்று தனியார் வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 10 நாட்கள் முன்னதாகவே தொடங்கும். இந்த ஆண்டு மே மாதத்தில் வெயிலின் தாக்கம் பெரிதாக இருக்காது.