சென்னை: தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமார், அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியதாவது: சிறைச்சாலைக்கு கைதிகள் வரும்போது, அவர்களின் சாதி குறித்த தகவல்கள் கேட்கப்படாது. பதிவேடு மற்றும் ஆவணங்களில் சாதி விவரங்கள் சேர்க்கப்படாது.

சாதி அடிப்படையில் பிரிவினை காட்டவோ அல்லது பிரித்து வைக்கவோ கூடாது. சாதி அடிப்படையில் எந்த வேலையும் ஒதுக்கப்படாது. குறிப்பாக, மனித கழிவுகளை சுத்தம் செய்யவோ அல்லது கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடவோ அவர்களை கட்டாயப்படுத்த கூடாது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.