கோடை காலத்தில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:-

மேற்கு வங்க மாநிலம் ஷாலிமாரில் இருந்து ஏப்ரல் 7, 14, 21 ஆகிய தேதிகளில் மாலை 6.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (02841) புறப்பட்டு, மறுநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். தலைகீழ் திசையில், வாராந்திர சிறப்பு ரயில் (02842) ஏப்ரல் 9, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 4.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11.20 மணிக்கு ஷாலிமாரை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.