காவல் துணை ஆய்வாளர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி மே 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் 1,299 துணை ஆய்வாளர் பணியிடங்களை தமிழ்நாடு சீருடைப் பணிகள் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 7 -ம் தேதி தொடங்கியது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த சூழ்நிலையில், துணை ஆய்வாளர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி மே 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சீருடைப் பணிகள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்களை மே 15-ம் தேதி வரை செய்யலாம்.