சென்னை: ஜிஎஸ்டி சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழிச்சாலை மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அந்த பகுதிகளில் நாளை முதல் 22-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பி, செமேயர்ஸ் சாலையில் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை) வலதுபுறம் திரும்பி நந்தனம் சந்திப்பு வழியாக இடது/வலது திரும்பி அண்ணாசாலை வழியாக செல்ல வேண்டிய இடத்தை அடையும்.

சைதாப்பேட்டையில் இருந்து செமேயர்ஸ் ரோடு நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்படும். அதற்குப் பதிலாக, இந்த வாகனங்கள் அண்ணாசாலை, செனடாப் சாலை வழியாகச் சென்று, பின்னர் செமேயர்ஸ் சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம். ஜிகேஎம் பாலம், செனடாய் சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் ஒருவழிப் பாதையாக மாற்றப்படும். காந்தி மண்டபம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. இதேபோல், ரத்னா நகர் மெயின் ரோடு, செனடாப் சாலையில் இருந்து ஒருவழிப் பாதையாக இருக்கும். அண்ணாசாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
அண்ணாசாலையில் இருந்து செனடாப் 1-வது தெருவுக்கு வரும் வாகனங்களும் அனுமதிக்கப்படும். ஆனால் செனடாப் 1-வது மெயின் ரோட்டில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. கோட்டூர்புரத்தில் இருந்து சேனாதோப் ரோடு வழியாக தேனாம்பேட்டைக்கு வரும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் ஜிகேஎம் பாலம் சர்வீஸ் சாலையின் இடதுபுறம் சென்று டர்ன்புல்ஸ் சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு, அண்ணாசாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.
சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், அண்ணாசாலை, செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒருவழிப் பாதைகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்படும் என போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.