சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் நாளை முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். ஏப்ரல் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாகவும், நாளை முதல் 31-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாகவும் இருக்கும்.