மேட்டூர் / தர்மபுரி: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 9,731 கன அடியாக இருந்த நீர் வரத்து நேற்று 11,397 கன அடியாக அதிகரித்தது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

அணை நீர்மட்டம் நேற்று 118.62 அடியாகவும், நீர் இருப்பு 91.28 டிஎம்சியாகவும் இருந்தது.
ஒகேனக்கல் காவிரியில் நேற்று நீர் வரத்து 9,500 கன அடியாக இருந்தது.