பேருந்து இயக்கத்தின் போது, பேருந்து நிறுத்தத்தை அடைந்த பிறகு கதவைத் திறக்க வேண்டும். கதவை மூடிய பிறகு மீண்டும் பேருந்து இயக்கப்பட வேண்டும். பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணித்தால், பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தி, மாணவர்களை பேருந்தின் உள்ளே ஏறச் சொல்ல வேண்டும், மாணவர்கள் பேருந்தில் ஏறிய பிறகு பேருந்து இயக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் ஆபத்தான முறையில் தொடர்ந்து பயணித்தால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தி, காவல்துறை அவசர அழைப்பு எண்ணுக்கு (100) தகவல் தெரிவிக்க வேண்டும். பேருந்து இயக்கத்தின் போது பேருந்து இரண்டு கதவுகளும் மூடப்பட்டிருப்பதை நடத்துனர்கள் உறுதி செய்ய வேண்டும்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பேருந்து கதவுகளை மூட முடியாவிட்டால், பணிமனையிலேயே கதவை சரிசெய்து அடுத்த பாதையில் இயக்க வேண்டும். மாணவர்கள் பேருந்தின் முன் ஓடி அதில் ஏற முயன்றால், பேருந்து வேகத்தைக் குறைத்து மாணவர்களை பேருந்தில் ஏற அனுமதிக்க வேண்டும். இவைதான் கொடுக்கப்பட்ட வழிமுறைகள்.