தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்ய மாநில அளவிலான அடைவுத்திறன் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 4, 5, 6 தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் 9.8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.முதல் தடவையாக நடைபெற்ற இந்த ஆய்வில், 3-ம் வகுப்பில் தமிழில் 67%, ஆங்கிலத்தில் 69%, கணிதத்தில் 54% மற்றும் சூழ்நிலையியலில் 76% பேர் அடைந்துள்ளனர்.

5-ம் வகுப்பில் தமிழில் 76%, கணிதம் மற்றும் சூழ்நிலையியலில் தலா 57%, ஆங்கிலத்தில் 51% என்ற நிலை காணப்பட்டது. 8-ம் வகுப்பில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் மிகவும் குறைவான சதவீதமே மாணவர்கள் பெற்றுள்ளனர்.இந்த அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், துணை முதல்வர் உதயநிதி மற்றும் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் நேரில் வழங்கினர்.
ஆய்வில், மாநில அளவில் கற்றல் திறன் அதிகம் இருந்த மாவட்டங்கள் கன்னியாகுமரி, கடலூர், மதுரை, தென்காசி, சிவகங்கை ஆகியவையாகும்.ஆனால் மிகுந்த வளர்ச்சி பெற்றதாக கருதப்படும் சென்னை, கோவை, ஈரோடு, நீலகிரி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கல்வி திறனில் பின்தங்கியுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
தமிழக அரசு இயற்றி வரும் எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவுத் திட்டம் மற்றும் திறன்மிகு வகுப்பறைகள் ஆகியவை மாணவர்களின் கற்றல் திறனை உயர்த்த உதவுகின்றன.மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் நன்றாக செயல்பட்டுள்ளனர். ஆனால் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு சவால்கள் உள்ளதாகவும், அதற்கான விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை, மாநில கல்வித் தரத்தை மேலோங்கி உயர்த்துவது எப்படி என்பதற்கான வழிகாட்டியாக உள்ளது.இதேபோல் தேசிய அளவிலான ‘நாஸ்’ ஆய்வுடன் ஒப்பிடுகையில் தமிழக மாணவர்கள் தேசிய சராசரியைவிட மேன்மேலும் செயல்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.