சென்னை: சென்னை மாநகரில் பெண்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், ‘பிங்க் ஆட்டோ’ (பிங்க் ஆட்டோ) வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக கடந்த 8-ம் தேதி 100 பயனாளிகளுக்கு ஆட்டோக்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தற்போது இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. சென்னையைச் சேர்ந்த, 20 முதல் 45 வயதுக்குட்பட்ட, ஓட்டுநர் உரிமம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஏப்ரல் 6-ம் தேதிக்குள் சென்னை மாவட்ட சமூக நல அலுவலர், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை-600001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.